View Details
ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை தொடுத்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் உள்ள இரான் துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட, இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இரானிய ராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவான ஐ.ஆர்.ஜி.சி கூறுகிறது.
அமெரிக்கா உள்பட பல நாடுகள் இரானை கண்டித்துள்ளன. பதற்றத்தை உடனடியாக தணிக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பதன் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார்.